24 மணி நேரத்தில் 10 பில்லியன் டன் பனிப்படலம் உருகியது
கீரின்லந்துப் பகுதியில் 24 மணி நேரத்தில் 10 பில்லியன் டன் எடைகொண்ட பனிப்படலம் உருகியுள்ளது.
கீரின்லந்துப் பகுதியில் 24 மணி நேரத்தில் 10 பில்லியன் டன் எடைகொண்ட பனிப்படலம் உருகியுள்ளது.
அந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாகத் தெரிவிக்கபப்ட்டது.
அதன்மூலம் இந்தப் பருவத்தில் கீரின்லந்தில் ஒரே நாளில் ஆக அதிகமான பனி உருகிய சம்பவம் இது.
உருகிய பனிப்படலங்கள் ஆறாக மாறி கீரின்லந்தில் ஓடும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் அனல்காற்றும் வீசி வருகிறது.