Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பங்களிப்பை அவர் பெரிதும் பாராட்டினார்.

வாசிப்புநேரம் -
தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர்

(படம்: 10 Downing Street/ Youtube)


பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பங்களிப்பை அவர் பெரிதும் பாராட்டினார். அறுவடையின் வரவைக் குறிக்க பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

'பொருளியலை ஊக்குவிக்கும் தொழில்கள் முதல் சமூகத்தில் கவனம் தேவைப்படுவோருக்குப் பராமரிப்பு வழங்குவது வரை, பிரிட்டனில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது' என்றார் திரு. ஜான்சன்.

'வரும் ஆண்டில் மகிழ்ச்சி, இன்பம், வளப்பம் ஆகிய அனைத்தும் பொங்கலைப் போல வாழ்வில் பொங்கட்டும்' என்று தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்