நால்வரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறுவன்
அமெரிக்கா: பிள்ளைகள் மூவரைம் ஒரு மாதுவையும் துப்பாக்கியால் சுட்டுக், கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
அமெரிக்கா: பிள்ளைகள் மூவரைம் ஒரு மாதுவையும் துப்பாக்கியால் சுட்டுக், கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
சம்பவம் உத்தா மாநிலத்தின் கிரேன்ஸ்வில் நகரில், நேற்று முன்தினம் நடந்ததாக CNN செய்தி நிறுவனம் கூறியது.
சம்பவத்தின் தொடர்பில் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது,
அங்கு 3 பிள்ளைகளும் ஒரு மாதுவும் மாண்டு கிடக்க காணப்பட்டனர்.
மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படும் சிறுவன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
சிறுவன் பின்னர், மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்டான்.
அவன் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறான்.
சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் உறவினர்களாக இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
2007-லிருந்து, உத்தா மாநிலத்தின் நடத்தப்பட்ட ஆகப் பெரிய கொலைச் சம்பவம் இது என்று காவல்துறையினர் கூறினர்.