Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில் : கட்டடச் சரிவில் 4 பேர் பலி

பிரேசிலின் ஃபோர்டலேசா (Fortaleza) பகுதியில் உள்ள 7 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்ததில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரேசில் : கட்டடச் சரிவில் 4 பேர் பலி

படம்: AFP

பிரேசிலின் ஃபோர்டலேசா (Fortaleza) பகுதியில் உள்ள 7 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்ததில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நடந்தது.

மாண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருவதாகவும், 6 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

கட்டடச் சிதைவுகளில் சிக்கி கொண்ட மாணவர் ஒருவர் தாம் நலமாக இருப்பதாக Selfie ஒன்றை Whatsapp சேவைமூலம் தெரிவித்தார், அதன் பிறகு அவர் அதிகாரிகளால் மீட்க்கப்பட்டார்.

கட்டடம் சரிந்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணைத் தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்