COVID-19: பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 3,000க்கும் மேற்பட்டோர் மரணம்
பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, 3,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டதாக, அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, 3,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டதாக, அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 86,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து சுமார் 12.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை 310,550ஐக் கடந்துவிட்டது.