கிருமிப் பரவல் மையமாக உருவெடுத்துள்ள பிரேசில்
பிரேசில், கிருமிப் பரவல் மையமாக உருவெடுத்துள்ளது என்று ஐக்கிய நாட்டு நிறுவன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரேசில், கிருமிப் பரவல் மையமாக உருவெடுத்துள்ளது என்று ஐக்கிய நாட்டு நிறுவன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் பிரேசிலில், கிருமிப் பரவலை முறியடிக்க அங்குள்ள தலைவர்கள் இன்னும் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
கடந்த வாரத்தில் மட்டும் பிரேசிலில், 250,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உலகில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு பிரேசில்.
அங்கு 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் அவதிப்படுகின்றனர்.
58,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.