Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இசை நிகழ்ச்சி

பிரிட்டனில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இசை நிகழ்ச்சி

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இசை நிகழ்ச்சி

படம்: REUTERS

பிரிட்டனில் இசை நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

2019ஆம் ஆண்டில் எப்படி மக்கள் நோய்ப்பரவலைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தனரோ அதே போல்
நிகழ்ச்சியில் மக்கள் கூடினர்.

லிவர்ப்பூல் நகரில் நேற்று நடத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

யாரும் COVID-19 நோய்ப்பரவலுக்கு எதிராக எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை.

இந்த நிகழ்ச்சியைச் சோதனை முயற்சியாகப் பிரிட்டன் பார்க்கிறது.

நிகழ்ச்சி மூலம் நோய்ப்பரவல் ஏற்படும் சூழல் இருக்கிறதா என்பதை அது ஆராயும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பு தான் அதில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மீண்டும் 5 நாள்களில் அவர்களுக்கு நோய்த்தொற்றுச் சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற சோதனை நிகழ்ச்சிகள் சிலவற்றை வரும் நாள்களில் பிரிட்டன் தொடர்ந்து நடத்தும்
என்று நம்பப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்