Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன்: கிருமிப்பரவலை முறியடிக்க அடுத்த மாதத்திலிருந்து புதிய தனிமைப்படுத்தல் முறை

பிரிட்டன்: கிருமிப்பரவலை முறியடிக்க அடுத்த மாதத்திலிருந்து புதிய தனிமைப்படுத்தல் முறை

வாசிப்புநேரம் -
பிரிட்டன்: கிருமிப்பரவலை முறியடிக்க அடுத்த மாதத்திலிருந்து புதிய தனிமைப்படுத்தல் முறை

(படம்: REUTERS/Henry Nicholls)

பிரிட்டன், கிருமிப்பரவலை முறியடிக்க, அடுத்த மாதத்திலிருந்து புதிய தனிமைப்படுத்தல் முறையைத் தொடங்கவிருக்கிறது.

அதன்படி, பிரிட்டனுக்குச் செல்வோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் பாதியாகக் குறையும்.

நோய்த்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து இங்கிலாந்து செல்வோருக்கு ஐந்து நாளுக்குப் பிறகு பரிசோதனை நடத்தப்படும்.

இரண்டு நாள்களுக்குள் அதன் முடிவு கிடைக்கும்.

நோய்த்தொற்று இல்லை என்று உறுதியானவர்கள்,இங்கிலாந்துக்குச் சென்ற ஆறாவது நாளில் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ள முடியும்.

விடுமுறைக் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால், அத்தகைய ஏற்பாட்டுக்காக சுற்றுலாத்துறை ஆவலாய்க் காத்திருக்கிறது.

கிருமித்தொற்றுச் சோதனைக்கு 65 லிருந்து 120 பவுண்ட் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே குடும்பமாகச் செல்வோருக்குப் பரிசோதனைக் கட்டணம் கூடுதல் சுமையாக இருக்கக் கூடும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்