பிரிட்டனில் தளர்த்தப்படும் சில நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள்
பிரிட்டனில் சில நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனில் சில நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவின் வேறு பகுதிகளில் நோய்ப்பரவல் மோசமடைந்து வருவதையும், புதிய கிருமி வகைகளினால் அச்சுறுதல் ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டினார்.
இன்று முதல் இங்கிலாந்தில் 6 பேர் வரை வெளியே ஒன்று கூட அனுமதிக்கப்படும்.
வெளிப்புற விளையாட்டு வசதிகளைச், சமூகத் தொடர்பு வரம்புகளுடன் பயன்படுத்தலாம்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திரு ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அழைப்பு வரும்போது அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.