Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: பிரிட்டனில் மேலும் 28 பேர் மாண்டனர்

COVID-19: பிரிட்டனில் மேலும் 28 பேர் மாண்டனர்

வாசிப்புநேரம் -

பிரிட்டனில், COVID-19 கிருமித்தொற்றுக்கு மேலும் 28 பேர் பலியாகிவிட்டனர்.

மாண்டோர் எண்ணிக்கை அங்கு தற்போது 465க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக 1,500 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை அங்கு 9,500-ஐக் கடந்துவிட்டது.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதியை வழங்கவும் அவர் உறுதி கூறினார்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து திரு. ஜான்சனின் அறிவிப்பு வெளிவந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்