COVID-19: பிரிட்டனில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த 158,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவி
பிரிட்டனில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த 158,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.
பிரிட்டனில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த 158,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் சுகாதாரத் துறை மக்களிடம் உதவி கேட்டது.
சுமார் 250,000 பேர் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்த ஒரு சில மணி நேரத்திலேயே 158,000
தொண்டூழியர்கள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனின் சுகாதார அமைச்சு அதன் தொடர்பில் கருத்துரைக்க மறுத்துவிட்டது.
பிரிட்டனில் இதுவரை COVID-19 கிருமித்தொற்றால் 422 பேர் மாண்டுவிட்டனர்.