Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்யும் British Airways

British Airways நிறுவனம், சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுக்கான விமானச் சேவைகளை அடுத்த மாதம் ரத்து செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்யும் British Airways

கோப்புப் படம்: AFP/Carl De Souza

British Airways நிறுவனம், சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுக்கான விமானச் சேவைகளை அடுத்த மாதம் ரத்து செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது.

லண்டனிலிருந்து சிங்கப்பூர், தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கான இருவழிப் பயணங்கள் பாதிக்கப்படும்.

COVID-19 கிருமித்தொற்றால், அந்நாடுகளுக்கான பயணங்களின் தேவை குறைந்துள்ளது என்று British Airways தெரிவித்தது.

ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திலிருந்து சில நாள்களுக்கு ஒருமுறை, சிங்கப்பூர் செல்லும் 6 இருவழிப் பயணங்கள் ரத்துசெய்யப்படும்.

அது அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.

அடுத்த மாதம் 14-ஆம் தேதிக்கும் 28-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், இத்தாலியின் சில நகரங்களுக்கான பயணங்கள் பாதிக்கப்படும்.

லண்டனிலிருந்து, மிலான், வெனிஸ் (Venice) உட்பட சில நகரங்களுக்கான 56 இருவழிப் பயணங்களை ரத்துசெய்யவுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

சோலுக்கு வழக்கமாக, தினசரி மேற்கொள்ளப்படும் பயணங்கள் இனி சில நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

அவர்களுக்கு விமானப் பயணக் கட்டணத்தைத் திருப்பிக்கொடுக்கவும், பயணத் தேதியைப் பின்னொரு நாளுக்கு மாற்றவும், ஏற்பாடு செய்யவுள்ளதாய் British Airways தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்