பிரிட்டன்: சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்புச் சாதனங்கள் போதுமான அளவில் இருக்கும்
பிரிட்டிஷ் அரசாங்கம், COVID-19 கிருமித்தொற்றைக் கையாளும் சுகாதார ஊழியர்களுக்குப் போதுமான அளவில் பாதுகாப்புச் சாதனங்கள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்கம், COVID-19 கிருமித்தொற்றைக் கையாளும் சுகாதார ஊழியர்களுக்குப் போதுமான அளவில் பாதுகாப்புச் சாதனங்கள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் சாதனங்கள் குறைவாக இருக்கின்றன என்று இதற்கு முன்னர் எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அரசாங்கம் அந்த வாக்குறுதியை அளித்துள்ளது.
ஏப்ரல் மாதம், முதலாம் கட்டக் கிருமிப்பரவல் உச்சத்தில் இருந்தது. COVID-19 நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவர்களும் தாதியரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகத் தொழிற்சங்கங்கள் கூறின.
முன்னிலை ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாததே அதற்குக் காரணம் என்று அவை கூறின.
4 மாதங்களுக்குத் தேவையான பாதுகாப்புச் சாதனங்கள் நம்பவர் மாதத்திலிருந்து தயாராக இருக்கும் என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக் (Matt Hancock) தெரிவித்தார்.