பிரிட்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையினுள் நுழைய முயன்ற ஆடவர் கைது
பிரிட்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற்தகவு வழியாக நுழைய முயன்ற ஓர் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற்தகவு வழியாக நுழைய முயன்ற ஓர் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் எலிசபெத் அரசியார் தங்கியிருக்கும் அரண்மனை அது.
22 வயதான அந்த ஆடவர் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை.
அந்த அத்துமீறலைப் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
ஆடவர் அரண்மனைப் பகுதியில் சில நிமிடம் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தார் என்று சன் நாளேடு தெரிவித்தது.
அண்மை ஆண்டுகளில் பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தில் பலமுறை பாதுகாப்பு அத்துமீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.