கனடாவில் பேருந்து விபத்து - மூவர் மரணம்; 23 பேர் காயம்
கனடாவின் தலைநகர் ஆட்டாவாவில் ஈரடுக்குப் பேருந்து நிறுத்தத்தின் மீது மோதியதில் மூவர் மாண்டனர். மேலும் 23 பேர் காயமுற்றனர்.
கனடாவின் தலைநகர் ஆட்டாவாவில் பேருந்து நிறுத்தத்தின் மீது ஈரடுக்குப் பேருந்து ஒன்று மோதியதில் மூவர் மாண்டனர். மேலும் 23 பேர் காயமுற்றனர்.
விபத்து நேற்று மாலை 4 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு) நிகழ்ந்தது.
பேருந்தின் வலப் பக்கத்தின் ஒரு பகுதி மிகவும்
சேதமடைந்தது.
மாண்டோரில் இருவர் பேருந்தில் இருந்தனர். மற்றொருவர் நடைமேடையில் இருந்தார்.
காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
கடுமையான காயமுற்ற 9 பேர் சிகிச்சை பெற்றுவதாக ஆட்டாவா மருத்துவமனை Twitter-இல் உறுதி செய்தது.
விபத்து நடந்த இடத்திலேயே பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகக் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டார்.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.