Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடாவில் பேருந்து விபத்து - மூவர் மரணம்; 23 பேர் காயம்

கனடாவின் தலைநகர் ஆட்டாவாவில் ஈரடுக்குப் பேருந்து நிறுத்தத்தின் மீது மோதியதில் மூவர் மாண்டனர். மேலும் 23 பேர் காயமுற்றனர். 

வாசிப்புநேரம் -
கனடாவில் பேருந்து விபத்து - மூவர் மரணம்; 23 பேர் காயம்

(படம்: AP)

கனடாவின் தலைநகர் ஆட்டாவாவில் பேருந்து  நிறுத்தத்தின் மீது ஈரடுக்குப் பேருந்து ஒன்று மோதியதில் மூவர் மாண்டனர். மேலும் 23 பேர் காயமுற்றனர்.

விபத்து நேற்று மாலை 4 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு) நிகழ்ந்தது.

பேருந்தின் வலப் பக்கத்தின் ஒரு பகுதி மிகவும்
சேதமடைந்தது.

மாண்டோரில் இருவர் பேருந்தில் இருந்தனர். மற்றொருவர் நடைமேடையில் இருந்தார்.

காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கடுமையான காயமுற்ற 9 பேர் சிகிச்சை பெற்றுவதாக ஆட்டாவா மருத்துவமனை Twitter-இல் உறுதி செய்தது.

விபத்து நடந்த இடத்திலேயே பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகக் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்பட்டார்.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்