முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் கனடா
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லைகளைத் திறந்துவிடும் கனடா
அமெரிக்கக் குடியிருப்பாளர்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்குத் தனது எல்லைகளைத் திறந்துவிடுவதாக, கனடா அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 9-ஆம் தேதி, தனிமைப்படுத்தப்படும் அவசியம் இன்றி, அவர்கள் கனடாவுக்குச் செல்லலாம்.
மேலும், செப்டம்பர் 7-ஆம் தேதிமுதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கும் எல்லையைத் திறந்துவிடுவதாக, கனடா குறிப்பிட்டது.
அமெரிக்க-கனடிய எல்லை, சென்ற ஆண்டு மார்ச் மாதம்-முதல், அவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
ஆனால், பயணக் கட்டுப்பாடுகளை அகற்றும்படி, கனடியப் பயணத் துறை அரசாங்கத்தை நெருக்கிவருகிறது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட தனது குடிமக்களும் நிரந்தரவாசிகளும், வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது தனிமைப்படுத்தப்படும் அவசியம் இல்லையென, கனடா, இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.