சீனாவில் புதிதாக 11 பேருக்குக் கிருமித்தொற்று
அவர்கள் அனைவரும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
வாசிப்புநேரம் -
சீனாவில் புதிதாக 11 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாக அந்நாட்டுச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
மேலும் 16 பேர், அறிகுறிகளின்றி பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை சீனத் தலைநிலத்தில், மொத்தம் 90,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாண்டோர் எண்ணிக்கை 4,636 ஆகப் பதிவானது.