சீனாவில் கிருமிப்பரவல் மேலும் விரிவடையக்கூடும் என அச்சம்
சீனாவின் அண்மைய கிருமிப்பரவல் மேலும் விரிவடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் அண்மைய கிருமிப்பரவல் மேலும் விரிவடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
எல்லா வட்டாரங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து வட்டாரங்களிலும் பயணத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
சீனா கிருமிப்பரவலைப் பெருமளவு கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் நடக்கவுள்ளதால் ஆங்காங்கே ஏற்படும் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.
சீனாவின் 11 வட்டாரங்களில் கடந்த வாரம், சமூக அளவில் 100க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்களில் பெரும்பாலோர், 13 சுற்றுலாக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள்.
அதிக அபாயமிக்க வட்டாரங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப் பயண நிறுவனங்களுக்குச் சீனா தடை விதித்துள்ளது.
நோய்ப்பரவல் நீடிக்கும் ஏதேனும் ஒரு வட்டாரத்துக்குச் சென்றவர்கள், பெய்ச்சிங் திரும்புவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.