Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவில் அதி நெடுந்தொலைவு ஓட்டத்தில் விபரீதம் - 27 அதிகாரிகளுக்குத் தண்டனை

பந்தயம் நடந்த வட்டாரத்தின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -

 << சீனாவில் அதி நெடுந்தொலைவு ஓட்டத்தில் விபரீதம் - 27 அதிகாரிகளுக்குத் தண்டனை >>

சீனாவில் கடந்த மாதம் அதி நெடுந்தொலைவு ஓட்டத்தில் 21 பேர் மாண்டதைத் தொடர்ந்து, 27 அரசாங்க அதிகாரிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பந்தயம் நடந்த வட்டாரத்தின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிகக் குறைவான வெப்பநிலையில் நடைபெற்ற நெடுந்தொலைவோட்டத்தில், குளிரால் 21 பேர் கடந்த மாதம் 22ஆம் தேதி மாண்டனர்.

100 கிலோமீட்டர் நெடுந்தொலைவு ஓட்டம், வடமேற்கு கான்ஸூ மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பந்தயம் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் முறையாக நடத்தப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.

மேற்பார்வை அமைப்புகள் இல்லாத, அதிக அபாயமிக்க விளையாட்டு நிகழ்ச்சிகளை, சீன விளையாட்டுத்துறை நிர்வாகம் கடந்த வாரம் ரத்து செய்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்