சீனாவில் உள்ள அமெரிக்கர்களைத் தடுத்துவைக்கப் போவதாகப் பெய்ச்சிங் மிரட்டல்
சீனாவில் உள்ள அமெரிக்கர்களைத் தடுத்துவைக்கப் போவதாகப் பெய்ச்சிங் மிரட்டல்
சீனாவில் உள்ள அமெரிக்கர்களைத் தடுத்துவைக்கப் போவதாகப் பெய்ச்சிங் மிரட்டியுள்ளது.
சீன ராணுவத்துடன் தொடர்புடைய கல்விமான்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதற்குப் பதிலடியாகச் சீனா அவ்வாறு நடவடிக்கை எடுப்பதாகக் கருதப்படுகிறது.
Wall Street Journal நாளேடு அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுக்குப் பல தரப்பினர் மூலம் சீனா அவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பதாக நாளேடு கூறியது.
சென்ற மாதம் அமெரிக்க வெளியுறவு அமைச்சு சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வோருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
அதில் வெளிநாட்டு அரசாங்கங்களிடம் பேரப்பேச்சு நடத்துவதற்கு ஏதுவாக அமெரிக்கக் குடிமக்களைத் தடுத்து வைத்தல், சீனாவிலிருந்து வெளியேற அனுமதி மறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் பெய்ச்சிங் ஈடுபடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.