கிரைஸ்ட்சர்ச் தாக்குதலை ஆதரித்த ஆடவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து நாடுகடுத்தல்
கிரைஸ்ட்சர்ச் தாக்குதலை ஆதரிக்கும் வகையில் கொண்டாடிய ஆடவர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து நாடுகடுத்தப்பட்டுள்ளார்.
கிரைஸ்ட்சர்ச் தாக்குதலை ஆதரிக்கும் வகையில் கொண்டாடிய ஆடவர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து நாடுகடுத்தப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயது பிரெண்ட்டன் டராண்ட்(Brenton Tarrant) மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 50 பேர் மாண்டனர்.
அதைக் கொண்டாடும் வகையில் Transguard பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் தமது Facebook பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அதனை அடுத்து, அந்த ஆடவர் பணிநீக்கம் செய்யப்பட்டு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து நாடுகடுத்தப்பட்டார்.
அந்த ஆடவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.