நியூஸிலந்துப் பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு
நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிரைஸ்ட்சர்ச் நகரில் ஆயுதந்தாங்கிய அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை வெளியே வரவேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சம்பவம் பள்ளிவாசல்களின் உள்ளே நடந்ததா அல்லது அவற்றின் அருகில் நடந்ததா என்பதைக் காவல் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
கிரைஸ்ட்சர்ச் நகரில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் சுடப்பட்டதாக The New Zealand Herald தெரிவித்தது.
சம்பவத்தில் சிலர் மாண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் நாளிதழின் இணையவாசல் குறிப்பிட்டது.