காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு...ஆக உச்சத்தில்
காற்றுமண்டலத்தில் முன் எப்போதுமில்லாத அளவு கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
காற்றுமண்டலத்தில் முன் எப்போதுமில்லாத அளவு கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதன் காரணமாக உலக வெப்பம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியிருப்பதாய் அவர்கள் கூறினர்.
1950ஆம் ஆண்டில் இருந்து காற்றுமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு கணக்கிடப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை ஹவாயியில் உள்ள ஆய்வகத்தில் காற்றுமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு ஆக உச்சத்தில் இருந்தது.
காற்றுமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அளவு இருந்திருக்கலாம் என்று ஆராச்சியாளர்கள் கூறினர்.
கரியமில வாயு அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.