COVID-19 தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இழப்பீடு கொடுக்க உலகச் சுகாதார நிறுவனம் ஒப்புதல்
COVID-19 தடுப்பூசிப் போட்டுக்கொள்வோர் எதிர்நோக்கக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்க உலகச் சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
COVID-19 தடுப்பூசிப் போட்டுக்கொள்வோர் எதிர்நோக்கக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்க உலகச் சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.
COVAX திட்டத்தின் கீழ், 92 ஏழை நாடுகளுக்குக் COVID-19 தடுப்புமருந்தை நிறுவனம் விநியோகிக்கிறது.
தடுப்புமருந்தைப் பெறும் அரசாங்கங்களின் முக்கியமான கவலையை நிறுவனத்தின் அறிவிப்பு போக்கியிருக்கிறது.
தடுப்பூசிப் போட்டுக்கொள்வதால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்கும் ஒரே அனைத்துலக முயற்சி அதுவென உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாக, வெளிப்படையாக, துரிதமாக இழப்பீடு வழங்கப்படும் என நிறுவனத்தின் சுகாதார அமைப்பு தெரிவித்தது.