COVID-19: அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியது
அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அங்கு புதிதாக 60,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குப் பிறகு இப்போது, ஒரே நாளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில், ஒரு மாதத்திற்குள் சுமார் 1 மில்லியன் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து 217,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
குளிர்காலம் தொடங்கியதிலிருந்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குளிர்காலத்தில் அதிகமானோர் வீட்டிலே இருப்பதால் நோய்ப்பரவல் மோசமாகக்கூடுமென சுகாதார வல்லுநர்கள் எச்சரித்தனர்.
மாணவர்கள் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்குத் திரும்புவதாலும், கட்டுப்பாடுகளால் மக்கள் சோர்வடைந்திருப்பதாலும் நோய்ப்பரவல் மோசமாகியுள்ளதை அவர்கள் சுட்டினர்.