Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள COVID-19 நோய்த்தொற்று

அமெரிக்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

அது, கிருமிப்பரவலின் கடுமை மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொற்றும்தன்மை அதிகம் உள்ள டெல்ட்டா கிருமி, வேகமான கிருமிப்பரவலுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் சில மாநிலங்களில், கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கையும் மாண்டுபோவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பழைய வகைக் கிருமிகள் அளவுக்கு, டெல்ட்டா கிருமியை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டிருக்கவில்லை என ஆய்வகச் சோதனைகள் காட்டுகின்றன.

Pfizer-BioNTech, AstraZeneca-தடுப்புமருந்துகள், இரண்டுமுறை செலுத்தப்பட்டவர்களிடம் டெல்ட்டா கிருமி பரவுவது கணிசமாகக் குறைவு என்று ஆய்வுகள் காட்டின.

எனவே, தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொள்வது முக்கியம் என்பதை அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்