Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மருமகளை வரவேற்கத் தயாரான தாயார்...ஆனால் உண்மையில் மகளைத்தான் வரவேற்றார்

மருமகளை வரவேற்கத் தயாரான தாயார் ஒருவர்...

வாசிப்புநேரம் -

மருமகளை வரவேற்கத் தயாரான தாயார் ஒருவர்...

ஆனால், மருமகளோ உண்மையில் தாம் பெற்றெடுத்த மகள் என்ற அதிர்ச்சியான தகவலைப் பெற்றார்...

இது ஏதோ ஒரு நாடகத்தில் இடம்பெறும் கதையைப் போல் தோன்றுகிறதா?

ஆனால், சீனாவின் ஸூச்சாவ் (Suzhou) நகரில் அது உண்மையில் நடந்துள்ளது.

அதுகுறித்து 8WorldNews செய்தி நிறுவனம், தகவல் வெளியிட்டது.

கடந்த புதன்கிழமை (மார்ச் 31) அன்று, தாயார் ஒருவர் தமது மகனுக்குத் திருமணம் நடத்திவைத்தார்.

மருமகளை வரவேற்கும் வேளையில், பெண்ணின் கையில் மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை அவர் கவனித்தார்.

தாயாருக்கு திடீரெனச் சந்தேகம்...

பல்லாண்டுகளுக்குமுன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது!

அவர் உடனடியாக சம்பந்திகளிடம் விசாரித்தார்.

அப்போதுதான் தெரியவந்தது உண்மை.

பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.

சிறு வயதில் இருந்தபோது காணாமற்போன மகளைக் கண்டுபிடிக்கமுடியாமல் தவித்த அந்தத் தாயாருக்கு மகிழ்ச்சி.

மருமகளாக இருக்கவேண்டிய பெண்ணுக்கும் எதிர்பாராத ஆனந்தம்.

சொந்தப் பெற்றோரை அடைந்ததில், திருமணத்தைக் காட்டிலும் அதிக ஆனந்தம் அடைவதாகக் கூறி மகிழ்கிறார் மணமகள்.

அந்தப் பெண் மணந்துகொண்ட ஆடவர், தாயாரின் தத்தெடுக்கப்பட்ட மகன் என்பதால், அவர்களது உறவுமுறை குறித்த குழப்பமும் நீங்கியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்