COVID-19: மாண்டோர் எண்ணிக்கை 21,000-க்கு அதிகரிப்பு
உலக அளவில் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 21,000ஐத் தாண்டியுள்ளது.
உலக அளவில் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 21,000ஐத் தாண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அரை மில்லியனை நெருங்கி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் இணையம் வழி இன்று கலந்தாலோசிக்கவிருக்கின்றனர்.
கிருமிப்பரவலால் உலகில் சுமார் 3 பில்லியன் மக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் உலகப் பொருளியல் ஆக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவதாகவும், உலகத் தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவனிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
எழைகளுக்கு உதவ சுமார் 2 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டது.
COVID-19 கிருமித்தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 1,000க்கும் அதிகமானோர் மாண்டனர். 70,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.