Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உரிமையாளருக்காக உயிரைக் கொடுத்த செல்ல நாய்

தீயணைப்பு வீரர்கள் வீட்டிலிருந்து பாம்பை அகற்றினர்.

வாசிப்புநேரம் -
உரிமையாளருக்காக உயிரைக் கொடுத்த செல்ல நாய்

(படம்:Pixabay)

ஸ்ரீ அமான்: நாய்கள் நன்றியுள்ளவை என்பதை நிரூபித்துள்ளது சரவாக்கில் ஒரு நாய். வீட்டினுள் நுழைய முயன்ற பாம்பிடமிருந்து உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தது.

உரிமையாளர் நாயை அழைத்த போது அது வராததால் என்ன நடக்கிறது என்று சென்று பார்த்தார்.

அப்போது நாயின் உயிரற்ற உடலை மலைப்பாம்பு சுற்றியிருப்பதைப் பார்த்தார்.

பதறிப்போன உறிமையாளர் பாம்பை அடித்தார். மிரண்ட பாம்பு அருகிலிருந்த குழிக்குள் மறைந்தது.

தீயணைப்பு வீரர்கள் வீட்டிலிருந்து பாம்பை அகற்றினர். 6 மீட்டர் நீளமுள்ள பாம்பைப் பிடிக்க சுமார் 1 மணிநேரம் ஆனது.

நாய் பாம்புடன் போராடியதால் பாம்பு வீட்டினுள் நுழையவில்லை என்றார் செல்ல நாயை இழந்த உரிமையாளர். தாங்கள் உயிருடன் இருப்பதற்குக் காரணம் நாய் என்றனர் குடும்பத்தார்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்