புதரில் காணாமல் போன சிறுமியைக் காப்பாற்றிய நாய்
புதரில் காணாமல் போன 3 வயது அரோராவைக் காப்பாற்றிய நாயை ஆஸ்திரேலியக் காவல்துறை பாராட்டியுள்ளது.
புதரில் காணாமல் போன 3 வயது அரோராவைக் காப்பாற்றிய நாயை ஆஸ்திரேலியக் காவல்துறை பாராட்டியுள்ளது.
17 வயதான மெக்ஸ், அரோராவின் குடும்ப நாய்.
வயதின் காரணத்தினால், அதற்குப் பார்வையும் செவிப்புலனும் ஓரளவுதான் செயல்படுகின்றன.
இருப்பினும், வீட்டை விட்டு உலாவச் சென்ற அரோராவைப் பின்தொடர்ந்து, உதவி வரும் வரை மெக்ஸ் பாதுகாத்துள்ளது.
அரோராவின் உறவினர்கள் கண்டுபிடிக்கும் வரை, 16 மணி நேரத்திற்கு மெக்ஸ் சிறுமிக்குத் துணையாக இருந்துள்ளது.
வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் காணாமல் போன அரோராவின் அலறலைக் கேட்டதாகச் சிறுமியின் பாட்டி குறிப்பிட்டார்.
சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிய போது, அரோரா இருந்த இடத்தை மெக்ஸ் காட்டியதாக அவர் கூறினார்.
அரோராவைத் தேடும் பணியில் 100க்கு மேற்பட்ட அவசரகால ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.