நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி
நைஜீரியாவில் பள்ளி ஒன்று அமைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் மாண்டனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
நைஜீரியாவில் பள்ளி ஒன்று அமைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் மாண்டனர்.
இதுவரை குறைந்தது 4 சடலங்கள் இடிபாடுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இடிபாடுகளில் மாணவர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லாகோஸ் (Lagos) நகரில் உள்ள அந்த 4 மாடிக் கட்டடத்தின், ஆக உயர் மாடியில் பள்ளி அமைந்திருந்தது.
சம்பவம் நிகழ்ந்த போது அதில் சுமார் 100 மாணவர்கள் இருந்தனர். கிட்டத்தட்ட 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அந்தக் கட்டடம் ஏற்கனவே பாழடைந்து போயிருந்ததாகவும், அதனை இடித்துத் தள்ளத் திட்டம் இருந்ததாகவும் லாகோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.