120,000 டாலர் மதிப்புள்ள கலைப் படைப்பைச் சாப்பிட்ட ஆடவர்
சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சித்திரிக்கும் கலைப் படைப்பு 120,000 டாலருக்கு விற்கப்பட்டது சிலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம்.
சுவரில் ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழத்தைச் சித்திரிக்கும் கலைப் படைப்பு 120,000 டாலருக்கு விற்கப்பட்டது சிலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம்.
ஆனால், மேலும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் பார்வையாளர் ஒருவர்.
அவர், வாழைப்பழத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த பசை நாடாவை அகற்றி, பழத்தைச் சாப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வாழைப்பழத்தைச் சாப்பிட்ட ஆடவர் மீது புகார் செய்யப்படவில்லை. அவருக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.
அதற்குக் காரணம்?...
ஆடவர் கலைப் படைப்பை அழிக்கவில்லை.
கலைப் படைப்பின் மதிப்பு அந்த வாழைப்பழத்தினால் அல்ல என்றும், படைப்பின் பின்னணியில் உள்ள கலைக் கண்ணோட்டத்தினால் மட்டுமே என்றும் காட்சியின் இயக்குநர் கூறியுள்ளார்.
சாப்பிடப்பட்ட வாழைப்பழத்தின் இடத்தில், சம்பவம் நடந்த 15 நிமிடங்களில் மற்றொன்று வைக்கப்பட்டது.