Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எகிப்தில் ரயில் தடம்புரண்டதில் 55 பேர் காயம்

எகிப்தில் ரயில் தடம்புரண்டதில் 55 பேர் காயம்

வாசிப்புநேரம் -
எகிப்தில் ரயில் தடம்புரண்டதில் 55 பேர் காயம்

(படம்: AFP/Stringer)

எகிப்தின் கைரோ (Cairo) நகரில் ரயில் தடம்புரண்டதில் 55 பேர் காயமடைந்தனர்.
அந்த விவரங்களை எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ரயிலில் இருந்த மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும், விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனவும் எகிப்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

எகிப்தில் சாலை, ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதுண்டு.

போக்குவரத்துக் கட்டமைப்பு சரியில்லாததே அதற்குக் காரணம் என்று குறைகூறப்படுகிறது.

எகிப்தில் சென்றஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ரயில் விபத்தில் 47 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்