எகிப்தில் ரயில் விபத்து - குறைந்தது 32 பேர் மரணம்
எகிப்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில், குறைந்தது 32 பேர் மாண்டதோடு 165 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில், குறைந்தது 32 பேர் மாண்டதோடு 165 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாட்டா (Tahta) நகரின் அருகில் இரண்டு ரயில்கள் மோதியதை அடுத்து, ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.
முன்னால் சென்றுகொண்டிருந்த ரயிலின் வேகக்கட்டுப்பாட்டு விசையை இயக்கியதால், பின்னால் இருந்த ரயில் மோதியதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து நேர்ந்த இடத்திற்கு 70க்கும் அதிகமான அவசர மருத்துவ உதவி வாகனங்கள் அனுப்பப்பட்டன.
விபத்து ஏற்படக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபாட்டா அல்-சிசி கூறியுள்ளார்.
- Reuters via BBC