எகிப்தில் முதல் COVID-19 கிருமித்தொற்று சம்பவம்
COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் தற்போது எகிப்தும் இணைந்துள்ளது.
COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் தற்போது எகிப்தும் இணைந்துள்ளது.
எகிப்தில் பாதிப்புக்குள்ளான முதல் நபர் வெளிநாட்டவர்.
ஆனால், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதையடுத்து சீனாவுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் எகிப்து ரத்து செய்துவிட்டது.
இம்மாதம் இறுதி வரை, சீனாவுக்கான அனைத்து விமானச் சேவைகளும் செயல்படாது என Egypt Air நிறுவனம் தெரிவித்தது.
கிருமித்தொற்றுப் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரிலிருந்து இம்மாதத் தொடக்கத்தில், 301 எகிப்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.