ஐஃபல் கோபுரம் இருளில்...துப்பாக்கிச்சூட்டில் மாண்டோருக்கு அஞ்சலி
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரத் துப்பாக்கிச் சூட்டில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாரிஸ் ஐஃபல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரத் துப்பாக்கிச் சூட்டில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாரிஸ் ஐஃபல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஐஃபல் கோபுரத்தில் இருள் சூழ்ந்தது.
ஸ்ட்ராஸ்பர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தைக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தில் 16 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிக்காரரைச் சுட்டுக்கொன்றதாக பிரஞ்சுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.