சீனாவுக்கும் துபாய்க்கும் 90க்கும் அதிகமான யானைகளை விற்பனை செய்துள்ள ஸிம்பாப்வே
ஸிம்பாப்வே 90-க்கும் அதிகமான யானைகளை சீனாவுக்கும் துபாய்க்கும் விற்பனை செய்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஸிம்பாப்வே 90-க்கும் அதிகமான யானைகளை சீனாவுக்கும் துபாய்க்கும் விற்பனை செய்துள்ளது.
அதன்மூலம் ஸிம்பாப்வே 2.7 மில்லியன் டாலரைப் பெற்றுக்கொண்டது.
யானைகளை விற்றதன் மூலம் 6 ஆண்டுகளில் கிடைத்த அந்தத் தொகை நாட்டிலுள்ள மற்ற யானைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
ஸிம்பாப்வேயின் பூங்கா, வனவிலங்கு நிர்வாக ஆணையம் அதனைத் தெரிவித்தது.
தேசியப் பூங்காக்களில் யானைகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அந்த அமைப்பு தெரிவித்தது.