எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமான விபத்து: உயிரிழந்தோருக்கு அஞ்சலி
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயரிழந்தவர்களுக்கு விமானத் துறை ஊழியர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயரிழந்தவர்களுக்கு விமானத் துறை ஊழியர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
கடந்த வாரம் விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் மாண்டனர்.
விழிகளில் கண்ணீர் மல்க, மலர் வளையங்களுடன் மக்கள் அஞ்சலி செலுத்தக் கூடினர்.
பாரம்பரிய அம்ஹரிக் இசை ஒலிக்க, கூடியவர்களின் நினைவில் அந்தத் துயரச் சம்பவம் நிழலாடியது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டியும், விமானி அறைக் குரல் பதிவுப் பெட்டியும் பாரிசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விபத்து எதனால் ஏற்பட்டது என்று புலனாய்வார்கள் ஆராய்ந்து வருகின்றனர்.