Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

157 பயணிகளை ஏற்றிச் சென்ற Ethiopian Airlines கீழே விழுந்து நொறுங்கியது - அனைவரும் பலி

நைரோபிக்குச்சென்றுகொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
157 பயணிகளை ஏற்றிச் சென்ற Ethiopian Airlines கீழே விழுந்து நொறுங்கியது - அனைவரும் பலி

(படம்: REUTERS/Amr Abdallah Dalsh/File Photo)

நைரோபிக்குச்சென்றுகொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

149 பயணிகளும் 8 விமானச் சிப்பந்திகளும் அதில் பயணம் செய்தனர்.

எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) இருந்து கென்யத் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

எத்தியோப்பியாவின் பிஷொஃப்ட்டு (Bishoftu) நகருக்கு அருகே அசம்பாவிதம் நேர்ந்தது.

விமானம் விழுந்த இடத்தைச் சுற்றித் தேடல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.

சம்பவம் ஏற்பட்டதன் காரணம் பற்றி இதுவரை தகவல் இல்லை.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியப் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் தெரிவித்துக்கொண்டார்.

பரிதவித்துப் போயிருக்கும் குடும்பத்தினர், விபத்துப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள காத்துக்கொண்டிருக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்