ஐரோப்பிய வட்டாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியது
ஐரோப்பிய வட்டாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியது
ஐரோப்பிய வட்டாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியுள்ளது.
ஒரு கண்டத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை.
வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்ட டெல்ட்டா வகைக் கொரோனா கிருமி அங்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
டெல்ட்டா கிருமி இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
ஐரோப்பாவில் சுமார் 8 நாளுக்கு ஒருமுறை 1 மில்லியன் பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுகிறது.
ஐரோப்பிய வட்டாரத்தில் நோய்த்தொற்றால் 1.3 மில்லியன் பேர் மாண்டனர்.
உலக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27 விழுக்காட்டினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.
நோய்த்தொற்றால் உலக அளவில் மாண்டவர்களில் 31 விழுக்காட்டினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.
நோய்த்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கபட்ட ஐரோப்பிய நாடாக ரஷ்யா உள்ளது.
அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 மில்லியனை எட்டவுள்ளது.
-Reuters