Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பொய்த்தகவல் கிருமித்தொற்றை மோசமடையச் செய்யும் ஆற்றல் கொண்டது

பொய்த்தகவல், COVID-19 போன்ற கிருமித்தொற்றுகளை மோசமடையச் செய்யும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
பொய்த்தகவல் கிருமித்தொற்றை மோசமடையச் செய்யும் ஆற்றல் கொண்டது

(படம்: AFP)

பொய்த்தகவல், COVID-19 போன்ற கிருமித்தொற்றுகளை மோசமடையச் செய்யும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் ஈஸ்ட் எங்லியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பொய்த்தகவல் பரவுவதால் கிருமித்தொற்று நிலவரம் எவ்வாறு பாதிப்படைகிறது என்று கண்டறியப்பட்டது.

பொய்த்தகவல் பரப்புவதை நிறுத்தினால் அது, மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

COVID-19 கிருமி எப்படி உருவானது, எப்படித் தொற்றியது என்று பொய்த்தகவல் பகிரப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

பொய்யான தகவல், மக்கள் ஆபத்தான செயல்களை மேற்கொள்ளத் தூண்டும் ஆற்றல் கொண்டது என்று கூறப்பட்டது.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய தகவல் பகிரப்படுவது 10 விழுக்காடு குறைந்தால், அது கிருமித்தொற்றின் தாக்கத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறியுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்