Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸ் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலின் உச்சத்தைக் கடந்து விட்டது : அதிபர் மக்ரோன்

பிரான்ஸ் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலின் உச்சத்தைக் கடந்து விட்டது : அதிபர் மக்ரோன்

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலின் உச்சத்தைக் கடந்து விட்டது : அதிபர் மக்ரோன்

படம்: AFP / Ludovic MARIN

பிரான்ஸ், இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலின் உச்சத்தைக் கடந்து விட்டதாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

ஒரு மாத முடக்கத்தைத் படிப்படியாகத் தளர்த்தப்போவதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, முதற்கட்டமாக வரும் வார இறுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

டிசம்பர் 15 ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள், அரும்பொருளகங்கள் முதலியவற்றைத் திறக்க அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், மதுக்கூடங்கள் முதலியவை ஜனவரி 20 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

மூன்றாம் கட்டக் கிருமிப்பரவல் அபாயத்தைத் தவிர்க்க அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதி விடுமுறைக்காலத்தில் மக்கள் பிரான்ஸ் முழுவதும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாள்களுக்கு முன்தினம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மற்றவர்களுடன் கலந்து பழக அனுமதிக்கப்படுவர்.

இரவு 9 மணி வரை நடப்பிலுள்ள ஊரடங்கு அந்த நாள்களுக்குப் பொருந்தாது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்