பிரான்ஸ் : வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 3 பேர் பலி
பிரான்ஸின் ரிவியேரா (Riviera) வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் மாண்டனர்.
பிரான்ஸின் ரிவியேரா (Riviera) வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் மாண்டனர்.
சென்ற வாரம், அங்கு பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் மாண்டனர்.
மோசமான வானிலை காரணமாக, அந்த வட்டாரத்தில் நடத்தப்படவிருந்த பல்வேறு விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், பிரான்ஸின் தெற்குப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் மூவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு உள்துறை அமைச்சு அதனைத் தெரிவித்தது.
சம்பவம் குறித்த விசாரணை
இடம்பெறுகிறது.