பிரான்ஸில் COVID-19 கிருமித்தொற்றுக்கு இரண்டாவது நபர் பலி
பிரான்ஸில், COVID-19 கிருமித்தொற்றுக்கு இரண்டாவது நபர் பலியானார்.
பிரான்ஸில், COVID-19 கிருமித்தொற்றுக்கு இரண்டாவது நபர் பலியானார்.
அவர் அந்நாட்டில் கிருமித்தொற்றால் மாண்ட முதல் பிரெஞ்சுக் குடிமகன்.
60 வயதான அந்த ஆடவர், நேற்று மோசமான நிலையில் இருந்ததாகவும், மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற பிறகு அவர் மாண்டதாகவும் பிரெஞ்சு சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
ஆடவர், அந்நாட்டில் புதிதாய்க் கிருமி தொற்றிய மூவரில் ஒருவர்.
பிரான்ஸில் மொத்தம் 17 பேருக்கு COVID-19 கிருமி தொற்றியுள்ளது.
பிரான்ஸில், COVID-19 கிருமித்தொற்றால் மாண்ட முதல் நபர் 80 வயதான சீன சுற்றுப்பயணி.
இம்மாத நடுப்பகுதியில் அவர் மாண்டார்.