Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

17 நோயாளிகளின் உடலில் நஞ்சைக் கலந்த மருத்துவர்மீது குற்றச்சாட்டு

பிரான்சில் 17 நோயாளிகளின் உடலில் நஞ்சைக் கலந்ததன் தொடர்பில் ஒரு பிரெஞ்சு மருத்துவருக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரான்சில் 17 நோயாளிகளின் உடலில் நஞ்சைக் கலந்ததன் தொடர்பில் ஒரு பிரெஞ்சு மருத்துவருக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளது.

வேறு 7 நோயாளிகளிடமும் அவர் அதேபோல் நடந்துகொண்டதன் விளைவாக நிகழ்ந்த மரணங்களின் தொடர்பிலும் விசாரணைகள் நடக்கின்றன.

தன் திறமையை வெளிப்படுத்த நோயாளிகளின் மயக்க மருந்தில் நஞ்சைக் கலந்து அவசரநிலை வந்தபின் விரைந்து உதவுவது போல் அவர் நடித்ததாக வழக்குரைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரெடெரிக் பேச்சியர் என்ற அந்த மருத்துவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்