மக்களைச் சந்திக்கச் சென்ற பிரெஞ்சு அதிபரின் கன்னத்தில் அறைந்த ஆடவர்
மக்களைச் சந்திக்கச் சென்ற பிரெஞ்சு அதிபரின் கன்னத்தில் அறைந்த ஆடவர்
மக்களைச் சந்திக்கச் சென்ற பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) கன்னத்தில் ஆடவர் ஒருவர் அறைந்துவிட்டார்.
தென்கிழக்கு பிரான்ஸில் நடைபெறவுள்ள வட்டார அளவிலான தேர்தலுக்காகத் திரு மக்ரோன் அந்தப் பகுதிகளுக்குச் சென்றிருந்தார்.
Tain-l'Hermitage என்னும் கிராமத்தில் காத்திருந்த மக்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அந்நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் அதிபர் மக்ரோன் அருகில் வந்து கன்னத்தில் அறைந்தார்.
அதிபர் மக்ரோன் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
திரு மக்ரோனைத் தாக்கிய ஆடவருடன் சேர்த்து மற்றொருவரும் சம்பவ இடத்திலேயே பாதுகாவலர்களால் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் இருவருக்கும் 28 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
அதிபர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்த இரண்டு மாதங்களுக்குத் திரு மக்ரோன் நாடு முழுவதும் பிரசாரப் பணிகளில் ஈடுபடவிருக்கிறார்.
-AFP