Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனைவியையும் 4 பிள்ளைகளையும் கொலை செய்த ஆடவர் கைது

பிரான்ஸ்: மனைவியையும் 4 பிள்ளைகளையும் கொலை செய்த ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மனைவியையும் 4 பிள்ளைகளையும் கொலை செய்த ஆடவர் கைது

(படம்: AFP)

பிரான்ஸ்: மனைவியையும் 4 பிள்ளைகளையும் கொலை செய்த ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சேவியர் டுபோன்ட் டெ லிகோனெஸ் என்ற அந்த ஆடவர் தமது குடும்பத்தினரை 2011-ஆம் ஆண்டில் சுட்டுக்கொன்றார்.
அதன் பின்னர், மாயமான அந்த ஆடவரைக் காவல்துறையினர், 8 ஆண்டுகளாக தேடிவந்தனர்.

ஸ்காட்லந்தின் (Scotland) கிளாஸ்கோ (Glasgow) விமான நிலையத்தில் 58 வயது டுபோன்ட் டெ லிகோனெஸை அதிகாரிகள் நேற்று அடையாளம் கண்டனர்.

அறுவைச் சிகிச்சையால் தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஆடவரை, அவருடைய விரல் ரேகை மூலம் அதிகாரிகள் அடையாளம் கண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆடவர் இதுவரை போலிக் கடவுச்சீட்டுடன் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்