கானா: வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் விசாரணை
கானாவில் (Ghana) வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவருகிறார்கள்.
கானாவில் (Ghana) வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் மூவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டுவருகிறார்கள்.
நாட்டின் தலைநகர் அக்ராவில் (Accra) அவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவ்வட்டாரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குறைந்தது 7 வெடிகுண்டுகள் காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
காவல்துறையின் விசாரணைகள் தொடர்கின்றன.
கானாவில் பொதுவாக அமைதி நிலவினாலும் இதற்கு முன்னர் இன, அரசியல் வன்முறைகளைச் சந்தித்துள்ளது.