Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்

தூங்கும் குழந்தைக்கு அருகில் மற்றொரு குழந்தையின் உருவம் படுத்திருப்பதைக் கண்டால் எந்தத் தாயும் பதறிப் போய்விடுவார். அத்தகைய திகிலூட்டும் காட்சியைப் பார்த்தார் தாயார் ஒருவர்.

வாசிப்புநேரம் -
தூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்

(படம்: Matriza Elizabeth/Facebook)

தூங்கும் குழந்தைக்கு அருகில் மற்றொரு குழந்தையின் உருவம் படுத்திருப்பதைக் கண்டால் எந்தத் தாயும் பதறிப் போய்விடுவார். அத்தகைய திகிலூட்டும் காட்சியைப் பார்த்தார் தாயார் ஒருவர்.

குழந்தையைக் கண்காணிக்கும் கேமராவின் வழி, தம் குழந்தைக்கு அருகே, வாயைத் திறந்தவாறு இருந்த மற்றொரு உருவத்தைப் பார்த்தார் மட்ரிஸா எலிசபத் (Matriza Elizabeth). அவருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

பிள்ளையின் அறைக்குச் சென்று பார்த்ததில் அங்கு, அசந்து தூங்கும் ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை.

பிள்ளையை எழுப்புவதா இல்லையா என்று இரவு முழுவதும் கண்விழித்துக் குழம்பினார் தாயார்.

பொழுது விடிந்ததும் குழந்தையின் அறைக்கு மீண்டும் சென்றார். அப்போது மெத்தை உறையை அகற்றிப் பார்த்ததில் அது மெத்தையின் விளம்பர ஒட்டுவில்லையில் உள்ள குழந்தையின் முகம் என்று தெரியவந்தது.

கண்காணிப்புக் கேமரா மெலிதான உறையைத் தாண்டி உள்ளிருக்கும் ஒட்டுவில்லையின் முகத்தையும் பதிவு செய்தது.

கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிய திடுக்கிடும் படத்துடன் Facebookஇல் மட்ரிஸா செய்த பதிவு சுமார் 280,000 முறை பகிரப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்