உலகில் பதிவாகும் தினசரிக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இருமடங்காகியுள்ளன
உலக நாடுகளில் பதிவாகும் தினசரிக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மார்ச் மாதத்திலிருந்து இரு மடங்காகியுள்ளதாக New York Times நாளேடு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் பதிவாகும் தினசரிக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மார்ச் மாதத்திலிருந்து இரு மடங்காகியுள்ளதாக New York Times நாளேடு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக, நாளொன்றில் பதிவாகும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 800,000 ஐத் தாண்டியுள்ளதாக நாளேடு குறிப்பிட்டது.
இவ்வாண்டு ஜனவரியில் சற்று குறைந்திருந்த புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியா, தென் அமெரிக்க வட்டாரம், ஆசிய நாடுகளில் அதிகரித்துள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்களால் அனைத்துலக எண்ணிக்கை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.